சென்னை: சென்னை மாதவரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 46 கிலோ தங்கக்கட்டிகளை தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. உரிய ஆவணம் இல்லாமல், 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து வரப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, 46 கிலோ தங்கக்கட்டிகள் உள்ளது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இது குறித்து அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
