சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தமிழகம்

சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.

தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் தேதிகள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக இருக்கும் அதே தருணத்தில். ஏப்ரல் 2வது வாரம் ஓட்டுப்பதிவு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந் நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.

பிப்.26 மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில் அவர் சென்னை வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழகம் வரும் அவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. ஆலோசனைக்கு பின்னர், எந்நேரத்திலும் தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Source link