சென்னை: தமிழக பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு

சென்னை: தமிழக பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநில கவர்னராக மாற்றப்பட்டார். இதையடுத்து, கேரள கவர்னராக இருந்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொறுப்பு கவர்னர் அர்லேகருக்கு பூங்கொத்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

அதேபோல, மேற்கு வங்க கவர்னராக ஆர்.என்.ரவியும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Source link