சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாளை( ஏப்ரல் 06) சென்னையில் நான்கு தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
முதல்முறையாக தேர்தல் களம் புகும் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, கடந்த 30ம் தேதி தாக்கல் செய்த அவர், பிரச்சாரத்தையும் துவக்கினார். பின் கொளத்துார் சென்ற அவர், கூட்ட நெரிசலில் சிக்கியதால், அடுத்து வில்லிவாக்கத்தில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தி. நகர் ஆகிய நான்கு தொகுதிகளில், நாளை விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுமே மிகவும் நெருக்கடியான பகுதிகள் என்பதால், தேர்தல் கமிஷன் மற்றும் சென்னை காவல்துறை தரப்பில், தவெகவிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.அதன்படி, சில கட்டுப்பாடுகளுடன், விஜய் பிரச்சாரத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் பிரசாரம் செய்ய விஜய் அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடைத்த பின், வரும் 7 அல்லது 8ம் தேதியில், விஜய் அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.
