சென்னை: பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என திமுக அறிவித்துள்ளது.திமுக உடன்

சென்னை: பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என திமுக அறிவித்துள்ளது.

திமுக உடன் கூட்டணி வைத்து இருக்கும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக்கான 5 பேர்கொண்ட குழுவை அமைத்து தயாராக உள்ளது, ஆனால், 70 நாட்கள் ஆகியும் கூட்டணி விவகாரம், தொகுதிகள் ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்து இருந்தது. திமுக இன்னமும் குழு கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்காதது கவலை அளிக்கிறது. தொண்டர்கள் மிகுந்த வலியுடுன் உள்ளனர். தலைவர்கள் வருத்தத்தில் உள்ளனர் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில் திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சட்டசபை அலுவல்கள் நிறைவு பெற்ற உடன் முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமைக்க உள்ள திமுக தொகுதி பங்கீட்டு குழுவானது, பிப்ரவரி 22ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளது.

Source link