மருத்துவமனையிலும் சோனம் வாங்சுக் போராட்டத்தை தொடரும் நிலையில் டெல்லியை நோக்கி பேரணிக்கு மனைவி கீதாஞ்சலி அழைப்பு விடுத்துள்ளார்.
நம்முடைய நாட்டில் வழக்காம ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்குற தலைவர்களை மட்டுமே இந்த உலகம் உற்றுநோக்கம். ஆனால் அந்த தலைவர்களோட போராட்டக் களத்துக்கு பின்னால நின்று ஒட்டுமொத்த போராட்டத்தையும் வழிநடத்துடன் நிழல் தலைவர்களை வரலாறு பெரும்பாலும் கவனிப்பதில்லை. அந்த வகையில் லடாக்கோட கல்வி மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளுக்காக தொடர்ந்து 21 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் தற்போது டெல்லி காவல்துறையால் சப்தர்ஜென்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உண்ணாவிரதத்தை 21 வது நாளாக தொடரும் சோனம் வாங்சுக்
இந்த இக்கட்டான சூழலில் போராட்ட களத்தை ஒரு இரும்பு பெண்மணியாக நின்று ஒட்டுமொத்த லடாக்கின் குரலை கையில் எடுத்திருக்கிறார் அவரது மனைவி கீதாஞ்சலி . இவர் போராட்டக்காரரின் மனைவி என்ற யதார்த்த அடையாளத்தையும் தாண்டி அவர் ஒரு உலக கராத்தே சாம்பியன் மற்றும் லடாக்கின் மாற்றுக்கல்விமுறையை உருவாக்கிய கல்வியாளர் பல பிம்பங்களை கொண்டுள்ளார். இது குறித்து விரிவாகபார்க்கலாம்.
Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!
லடாக்கிற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலியுறுத்தியும் ,நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் சமூக ஆர்வலர் சோனம் வாங்க் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார். குறிப்பாக நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தன்வந்திரி பிரதான் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார். தொடர்ந்து போராட்டம் 21 நாட்களை கடந்த நிலையில் அவரது உடல்நிலை நலிவடைந்ததை தொடர்ந்து டெல்லி காவல்துறையினரால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
மோசமடைந்த உடல்நிலை
ஆனால் மருத்துவமனையிலும் குளுக்கோஸ் அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்ள மறுத்து வெறும் உப்பு தண்ணீரை மட்டுமே குடித்து தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து அவரது மனைவி கீதாஞ்சலி , மருத்துவமனை நிர்வாகத்தின் மருத்துவ அறிக்கைகளில் வெளிப்படுத்த தன்மை இல்லை என்றும், தங்களின் அனுமதியின்றி சோனம் வாங்க்சுவிற்கு எந்த ஒரு மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
யார் இந்த கீதாஞ்சலி
வழக்கமான ஒரு போராட்டக்காரரின் மனைவியாக இல்லாமல் கீதாஞ்சலி பின்னணி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது .ஒடிசாவில் பிறந்த இவர் இயற்பியல் மற்றும் எம்பியை முடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப்பில் பிளாக் பெல்ட் பெருவில் தங்கம் என்ற ஒரு சர்வதேச வீராங்கனை ஆவார். மேலும் லடாக்கின் புகழ்பெற்ற ஹிமாலயன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆல்டர்னேட்டிவ்ஸ் லடாக் கல்வி நிறுவனத்தை உருவாக்கி அங்குள்ள பழங்குடியின மக்களின் கல்விக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் கீதாஞ்சலி
பேரணியை கையிலெடுத்த மனைவி
இந்த போராட்டத்திற்கு மத்தியில் ஒருவேளை சோனம் வாங்க் டெல்லி காவல்துறை சிறை பிடித்து வைத்தாலும், திட்டமிட்டபடி ஜூலை 20ம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றம் நோக்கிய பிரம்மாண்ட பேரணியை தானே முன் நின்று வழி நடத்துவேன் என்று கீதாஞ்சலி அறிவித்திருப்பது ஒட்டுமொத்த போராட்ட களத்திற்கும் புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக நீட் எதிர்ப்பு மற்றும் கல்வி சீர்திருத்த போராட்டம் என்பது வெறும் வினாத்தாள் கசிவுக்கானது அல்ல.. இந்த நாட்டின் ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் கொள்கையாளர்களையும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்கான போராட்டம் என்று கீதாஞ்சலி என்று கூறியுள்ளது. நாடு முழுவதுலும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
Source link
