ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளாக தினமும் நடந்தே தபால் வேலை செய்யும் பெண்

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த தபால் துறையில், ஜம்மு-காஷ்மீரின் மற்ற பகுதிகளில் உள்ள தனது ஆண் சகாக்களைப் போலவே அதே மணி நேரம் உழைத்து, சமமான பணிகளைச் செய்தும், உல்பாத் மாதத்திற்கு ரூ.22 ஆயிரம் தான் சம்பாதிக்கிறார். வேறு எந்தவிதமான சலுகையையும் அவர் கோருவதும் இல்லை. ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகளே உள்ள நிலையில், இந்த கடினமான வேலையை செய்ய உங்களால் எப்படி முடிகிறது என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

சில நேரங்களில் இது கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த வேலையின் மீதான ஆர்வம் என்னை இதை விட்டு விலக அனுமதிக்கவில்லை. இந்த தொழிலில் கண்ணுக்கு தெரியாத வெகுமதிகளே என்னை தொடர்ந்து இயங்க வைக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளில், நீண்டகாலமாக உறவினரிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட கடிதம், அல்லது தொலைவில் உள்ள ஒருவரிடமிருந்து வரும் பார்சல், வேலைவாய்ப்பு போன்ற நற்செய்திகளை நான் கொண்டு செல்லும் போதெல்லாம், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுவதை பார்க்கிறேன்.

இது புவியியல் எல்லைகளைக் கடந்து மக்களை இணைக்கிறது. இதனால் நான் என் வேலையை ஒரு நற்செயலாகக் கருதி மனப்பூர்வமாக செய்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். உல்பாத் பானோவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source link