“ஜாக்கி ஷெரஃப் கிட்ட பாராட்டு வாங்கியிருக்கேன்!” – ‘ஆரண்ய காண்டம்’ கொடுக்காப்புளி பேட்டி |”I have received praise from Jackie Shroff!” – ‘Aaranya Kaandam’ actor interview

அவங்க சொன்னதுக்குப் பிறகுதான் நான் உள்ள வரணும். ஆனா, நான் தெரியாம சொல்றதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். அப்போதுதான் குமாரராஜா சார் டென்ஷனாகி ‘எவ்வளவு லாஸ் ஆகுது பாரு’னு திட்டினாரு.

நான் எவ்வளவு பெரிய தப்பு அப்போ பண்ணினேன்னு ஐந்து வருஷம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சது. ஏன்னா, அது லாங் ஷாட். என்னுடைய தவறுனாலதான் அப்போ ஃபிலிம் கேன் வீணாகிடுச்சு. அதே மாதிரி இன்னொரு அனுபவமும் இருக்கு.

ஒரு சேஸிங் சீன்ல கேமரா என்னை ஃபாலோவ் பண்ணிட்டே வரும். குரு சோமசுந்தரம் சார் அவருக்கு ஷாட் இல்லைனு, அப்போ உதவி இயக்குநராக இருந்த அருண் மாதேஸ்வரன்கிட்ட ஜூஸ் குடிச்சிட்டு பேசிட்டிருந்தார். அதுவும் கேமராவுல பதிவாகிடுச்சு. இதெல்லாம் ஃபன்னி மொமண்ட்ஸ்!

Aaranya Kaandam - Vasanth

Aaranya Kaandam – Vasanth

ஷூட்டிங் நடக்கும்போது, நான் சின்ன பையன்கிறதுனால ஜாக்கி ஷெரஃப் சார், பி.எஸ். வினோத் சார் எவ்வளவு பெரிய ஆட்கள்னு எனக்கு தெரியாது. அவங்ககிட்டலாம் பாராட்டும் வாங்கியிருக்கேன்.

இதெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கு” என்றவர், “‘ஆரண்ய காண்டம்’ மூலமாகத்தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது.

இதுக்குப் பிறகுதான் ஹலீதா ஷமீம் மேமோட ‘பூவரசம் பீப்பீ’ படத்துல நடிச்சேன். இயக்குநர் வசந்த் சாரும் என்னைப் பாராட்டி அவருடைய ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்துல நடிக்க வச்சாரு” என்றார்.

Source link