புதுடில்லி:டில்லியில், ஜானக்புரி என்ற இடத்தில், டில்லி நீர் வளத்துறையினரால், சாலையில் குடிநீருக்காக தோண்டப்பட்டிருந்த, 15 அடி ஆழ குழியில், கடந்த பிப்ரவரி, 5ம் தேதி விழுந்த கமல் தியானி என்ற வங்கி ஊழியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
அந்த வழக்கில், டில்லி போலீசார் , 877 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், முதல் குற்றவாளியாக ஹிமான்சு குப்தா, 45, ராஜேஷ்குமார், 47, யோகேஷ், 23, ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அதில், குற்றவாளிகள் மூடாமல் விட்டுச் சென்ற குழி மற்றும் அதை மூடாமல் விட்டுச் சென்றதால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது என கூறப்பட்டுள்ளது.
