ஐ.ஐ.எஸ்.சி.யின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப பூங்கா, இஸ்ரோ மற்றும் கியோனிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பெங்களூரு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மண்டலம் என்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளாகம் அமைக்கப்படும். கடந்த 2025–26 நிதியாண்டின் தொடக்கத்தில், கர்நாடகாவின் ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு மாதமும் சுமார் 10% என்ற ஆரோக்கியமான வேகத்தில் வளர்ந்து வந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு (Restructuring) பிறகு, இந்த வளர்ச்சி வேகம் 4% ஆகக் கடுமையாகக் குறைந்துவிட்டது.
வரி விகித மாற்றங்களால் கர்நாடக அரசுக்கு வர வேண்டிய வருவாயில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) சுமார் ரூ. 10,000 கோடி வருவாய் குறையும். அடுத்த நிதியாண்டில் (2026-27) சுமார் ரூ. 15,000 கோடி வருவாய் குறையும். மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் மட்டும் கர்நாடக அரசுக்கு சுமார் ரூ.25,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
