டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தால் நடவடிக்கை

சென்னை: தேர்​தல் நடத்தை விதி​கள் அமலாகி​யுள்ள நிலை​யில், டாஸ்​மாக் கடைகளில் கடந்த ஆண்டை விட 30 சதவீதத்​துக்கு மேல் மது விற்​பனை அதி​கரித்​தால் நடவடிக்கை எடுக்​கப்​படும் என அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் தற்​போது 4,800 டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் நகர்ப்​புறக் கடைகளில் அதி​கள​விலும், கிராமப்​புறங்​களில் குறைந்த அளவிலும் மது விற்​பனை நடை​பெறும். இந்​நிலை​யில் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்ள சூழலில் கட்சி கூட்​டங்​கள், பிரச்​சா​ரக் கூட்​டங்​கள் நடை​பெறும் இடங்​களில் வழக்​கத்தை விட கூடு​தலாகவே விற்​பனை நடை​பெறு​வது வழக்​கம். மேலும் வாக்​கு​களுக்​காக மது விநி​யோகம் செய்​யப்​படலாம் எனவும் சிலர் தெரிவிக்​கின்​றனர்.

Source link