சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டை விட 30 சதவீதத்துக்கு மேல் மது விற்பனை அதிகரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 4,800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நகர்ப்புறக் கடைகளில் அதிகளவிலும், கிராமப்புறங்களில் குறைந்த அளவிலும் மது விற்பனை நடைபெறும். இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கட்சி கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் வழக்கத்தை விட கூடுதலாகவே விற்பனை நடைபெறுவது வழக்கம். மேலும் வாக்குகளுக்காக மது விநியோகம் செய்யப்படலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
