டிஎன்எஸ்ஜேஏ சார்பில் இளம் வீரர்களுக்கு ஊக்கத்தொகை

சென்னை: சென்னை சூப்​பர் கிங்ஸ் – தமிழ்​நாடு விளையாட்டு பத்​திரி​கை​யாளர்​கள் சங்க (டிஎன்எஸ்ஜேஏ) விருதுகள் மற்​றும் உதவித்​தொகை வழங்​கும் விழா நேற்று சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதான வளாகத்​தில் நடைபெற்​றது.

இதில் வளர்ந்து வரும் 10 இளம் விளை​யாட்டு வீரர்​களுக்கு தலா ரூ.50,000 உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. யு-9 செஸ் வீரர் தமிழ் அமுதன், ஆசிய இளை​யோர் செஸ் சாம்​பியன் ஆர்​.ஆரண்​யா, மன்​னார்​குடியை சேர்ந்த 15 வயதான கால்பந்து வீராங்​கனை எஸ்​.தர்​ஷினி, சஷாங்க் சரவணக்​கு​மார் (பாரா சைக்​கிளிங்), டி.தரணிதரன் (ஈட்டி எறிதல்), ஷ்ரியா ஆனந்த் (டேபிள் டென்​னிஸ்), டி.சவுமியா (வாலி​பால்), பி.ஹரிஷ் (அலைச்​சறுக்​கு), எஸ்​.அஸ்​ரன்​கா, பி.கே. கிஷோர் (கிரிக்​கெட்) ஆகியோர் உதவித் தொகையை பெற்​றனர்.

Source link