சென்னை: அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.பாலமுருகன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கையாண்டு வரும் எளிமையான மற்றும் நூதன பிரச்சார முறைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
வேட்புமனுத் தாக்கலை முடித்த கையோடு களத்தில் இறங்கியுள்ள பாலமுருகன், தினமும் காலை நேரங்களில் தொகுதியிலுள்ள முக்கியப் பூங்காக்களுக்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
