இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “உத்தம் நகர் மக்கள் வன்முறைக்காக பெரும் விலையை செலுத்தியுள்ளனர். அவர்கள் இனிமேலும் ரத்தக் களரியை விரும்பவில்லை. வன்முறை, வெறுப்பை தூண்டுவதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மட்டுமே இத்தகைய ரத்தக் களரியை விரும்புகின்றன.
நாட்டின் வலிமை அதன் ஒற்றுமையிலும் சகோதரத்துவத்திலும் அடங்கியிருப்பதால், டெல்லி மக்கள் எந்தவிதமான தூண்டுதல்களுக்கும் பலியாகிவிடக் கூடாது. அமைதி காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
