தங்கம், வெள்ளி இ.டி.எப்., உள்நாட்டு விலையில் கணக்கீடு

மி யூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்கம் மற்றும் வெள்ளியின் ‘என்.ஏ.வி.,’ மதிப்பை எப்படி கணக்கிட வேண்டும் என்பதில் ‘செபி’ புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுவரை ‘லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன்’ நிர்ணயிக்கும் சர்வதேச விலையை அடிப்படையாக கொண்டு, அதனுடன் இறக்குமதி வரி, போக்குவரத்து செலவு போன்றவைகளை சேர்த்து என்.ஏ.வி., கணக்கிடப்பட்டு வந்தது.

இனி, உள்நாட்டு நேரடி சந்தை விலையை மட்டுமே அடிப்படையாக கொண்டு என்.ஏ.வி., கணக்கிடப்படும். இந்திய சந்தை நிலவரத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை செபி மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.

முக்கிய அம்சங்கள்
*மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஒரே மாதிரியான விலையை பின்பற்ற உதவும்
*உள்நாட்டு விலையை பயன்படுத்துவதால், இதில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை
* இனி இ.டி.எப்., மதிப்பு, தங்கம் விற்கும் விலைக்கு மிக நெருக்கமாக இருக்கும்
* சர்வதேச டாலர் மதிப்பு மற்றும் இறக்குமதி வரி கணக்கீடுகளால் ஏற்படும் சிறிய விலை மாற்றங்கள் இனி குறைய வாய்ப்புள்ளது
*அனைத்து இ.டி.எப்., நிறுவனங்களும் ஒரே விலையை பின்பற்றுவதால், எந்த திட்டம் சிறந்தது என்பதை முதலீட்டாளர்கள் எளிதில் ஒப்பிட முடியும்.

Source link