தஞ்சாவூர்: எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, உணவுத்துறை அமைச்சராக இருந்த வீராசாமி நேற்று காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி, 88, பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
கடந்த 1984ல் அ.தி.மு.க., சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாகி, உணவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்த வீராசாமி, நேற்று அதிகாலை காலமானார்.
