தண்ணீர் பாட்டிலுக்கும் தட்டுப்பாடு அபாயம்; கோடையில் விலை உயர வாய்ப்பு!

மேற்காசிய நாடுகளில் தீவிரமாகும் போர்ச் சூழல் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பாட்டில்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் கோடைக்காலத்தில் தண்ணீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போர் தாக்குதலை தொடர்கின்றன. ஈரானும் அமெரிக்க தளவாடங்களை குறிவைப்பதாக வளைகுடா நாடுகளின் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

போர் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, வணிக ரீதியான காஸ் சிலிண்டர்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது.

அடுத்ததாக, இதன் தாக்கம் பெட்ரோலிய பொருட்களின் மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் நாற்காலிகள், வாகனங்களுக்கான டயர்கள், சிந்தடிக் சேலைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட 6,000-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை தாறுமாறாக உயர செய்துள்ளது.

Source link