“தனுஷ் சாருக்காக எழுதிய ‘காக்கி சட்டை’ இரண்டாம் பாதி சீரியஸாக இருக்கும்!” – துரை செந்தில்குமார் |”In the version of ‘Kaaki Sattai’ written for Dhanush Sir, the second half was serious!” — Durai Senthilkumar

இயக்குநர் துரை செந்தில்குமார், “‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் மனோபாலா சாரின் கதாபாத்திரத்தை சேர்த்ததில் எனக்கு திருப்தி கிடையாது. நான் தனுஷ் சாருக்காக எழுதிய ‘காக்கி சட்டை’ வெர்ஷனில் இரண்டாம் பாதி மிகவும் சீரியஸாக இருக்கும்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் சிவகார்த்திக்கேயனுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. ‘காக்கி சட்டை’-யில் அவரை எண்டர்டெயினிங்காக செய்ய வைத்துவிடுங்கள்.

சீரியஸாக செய்ய வைத்துவிடாதீர்கள் என்றனர். அதனை மாற்ற முயற்சித்தது எனக்கு சரியாகத் தெரியவில்லை.” என்றவர், “‘கொடி’ திரைப்படத்திற்கு முதலில் 35 நாள்கள் மட்டும் ஷூட் செய்துவிடுவோம்.

பிறகு க்ளைமேக்ஸ் பகுதியை எழுதிவிட்டு படப்பிடிப்பிற்கு போகலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், ‘நான் இப்போது அவைலபிளாக இருக்கிறேன். என்னை வைத்து முடித்துவிடுங்கள் செந்தில்’ என தனுஷ் சார் சொன்னார். அப்போது தொடர்ந்து 52 நாள்கள் என்னுடன் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்தார்.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை இன்னும் கொஞ்சம் பெட்டராக எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். இனிமேல் அதை நான் திருத்திக் கொள்ள வேண்டும்.

படப்பிடிப்பிற்கு செல்லும்போதே அதனை எழுதி முடித்துவிட்டு செல்ல வேண்டும் எனத் தோன்றியது. அதுபோல ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் கமர்ஷியல் விஷயங்களுக்காக ஸ்கிரிப்டில் செய்த மாற்றங்களை செய்திருக்க வேண்டாம் என இப்போது தோன்றுகிறது.” எனக் கூறியிருக்கிறார்.

Source link