அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், எப்போதும் தன்னை உயர்வாக சித்தரிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது அவருக்கு வாடிக்கையாக உள்ளது. சர்வதேச அளவில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்து விட்டால், அதற்கு காரணம் தான் என்று மார்தட்டிக் கொள்வது அவரது வழக்கம்.
இந்தியா பாகிஸ்தான் போரை தான் தான் நிறுத்தியதாக தினந்தோறும் ஏதேனும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிவிடுவார். நீண்ட நாட்களாக அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்க வேண்டும் என்று அடிக்கடி கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததால் அந்த அமைப்பினரை கடுமையாக விமர்சித்து இருந்தார். இறுதியில் தனது நண்பரான ஃபிஃபா அமைப்பு தலைவரை வைத்து, புதிதாக ஃபிஃபா அமைதி விருதை உருவாக்கி , அதைப் பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு நாளும் ட்ரம்பின் நடவடிக்கை ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சர்ச்சை கிளப்பும் வகையில் இருந்து வருகிறது. இன்று கத்தோலிக்க மதத் தலைவரான போப்பை விமர்சித்து இருந்தார். அந்த செய்தி ஓய்வதற்குள் தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரித்து ஒரு படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
