படுதோல்வியை தழுவிய திமுக
அதேபோல 1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டே தொகுதிகளில்தான் வென்றிருக்கிறது.
அதாவது துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி மட்டுமே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
ராஜுவ் காந்தி மறைவிற்கு பிறகு நடந்தத் தேர்தல் என்பதாலேயே திமுக இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. குறைவானத் தொகுதிகளை திமுக வென்றது இந்தத் தேர்தலில் தான்.

அதிமுக வென்ற அதிகபட்ச தொகுதிகள்
அதிமுக-வை பொறுத்தவரை திமுக படுதோல்வி அடைந்த 1991 தேர்தலில் தான் அதிமுக அதிக தொகுதிகளை வென்றிருக்கிறது.
அந்தத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. ராஜீவ் காந்தி இறந்த அனுதாப அலையிலேயே அதிமுக அதிக தொகுதிகளை வென்றதாகக் கூறப்படுகிறது.
