சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் செ.ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாளில் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குவது கட்டாயமாகும்.
