மேலும் நமது அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே காலத்தில் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
எனவே தடைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஆழ் கடலில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் ஏப்ரல் 14-ந்தேதி இரவு 12 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனை கடைபிடிக்காமல் தடையை மீறும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மீன் தடையின் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்வரத்து இருக்காது என்பதால், தடைக்காலத்திற்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஏப்ரல் 12) சென்னை காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப் பேட்டை உள்ளிட்ட மீன் சந்தைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியதுடன், மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
