தமிழகத்தில் 10-ந்தேதியில் இருந்து வெப்ப அலை வீசக்கூடும்- வானிலை மையம் எச்சரிக்கை

10-ந்தேதியில் இருந்து கடலோர வடக்கு தமிழ்நாடு, வடகடலோர மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருக்கும். அதாவது சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.

இந்த மாதம் வழக்கத்தை விட அதிக வெப்பமானதாக இருக்கும். மழை இடையிடையே நிவாரணம் அளித்தாலும் வெப்பத்தால் அசௌகரியங்கள் ஏற்படும். எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். வானிலையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link