தமிழகம் முழுக்க ஜவுளிக் கடைகளில் அதிரடி ரெய்டு.. பரபரப்பு தகவல்.!

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக, துணிக் கடைகளில் சேலை மற்றும் வேட்டியை பரிசாக அளிப்பதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித் துறை அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற புதுச்சேரி தேர்தலின் போது, காங்கிரஸ் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு பரிசு டோக்கன்களை வழங்கியதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகளில் அதிரடி ரெய்டை மேற்கொண்டுள்ளது வருமான வரித்துறை.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் ஐடி ரெய்டு நடைபெற்ற நிலையில், தற்போது தமிழ்நாடு முழுக்க வருமானவரித்துறை என சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link