அரசுத் துறைகளுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளடங்கிய பணிக்குழுக்கள் அமைக்க வேண்டும். அகற்றும் பணிகளை மேற்பார்வையிட சென்னை உயர் நீதிமன்ற பகுதிக்கு உட்பட்ட வடக்கு மாவட்டங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசனும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட தென்மாவட்டங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வமும் நியமிக்கப்படுகின்றனர்.
அடுத்த பருவமழை தொடங்குவதற்கு முன்பே அகற்றும் பணியை முடிக்க வேண்டும். அப்போதுதான் பருவமழைக் காலத்தில் உள்ளூர் தாவர இனங்களை நட்டு வளர்க்க முடியும்” என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்.17-க்கு தள்ளிவைத்தனர்.
