தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சி தேர்தலையும் நடத்த கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலுடன் சேர்த்து உள்​ளாட்​சித் தேர்​தலை​யும் நடத்​தக்​கோரி தொடரப்​பட்ட மனு வாபஸ் பெறப்​பட்​ட​தால், வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திரு​வள்​ளூரைச் சேர்ந்த வழக்​கறிஞர் சிவகுமரன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “தமிழகத்​தில் 27 மாவட்​டங்​களில் ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான பதவிக்​காலம் கடந்த ஜனவரி​யுடன் முடிவடைந்து விட்​டது. எஞ்​சிய மாவட்​டங்​களின் பதவிக்​காலம் விரை​வில் முடிவடைய​வுள்​ளது. இந்​நிலை​யில் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுடன் உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான தேர்​தலை​யும் சேர்த்து நடத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகளை ஆராய்ந்​து, உள்​ளாட்சி தேர்​தலை​யும் அறிவிக்க உத்​தர​விட வேண்​டும்.

Source link