தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசு தலையீடு: இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், மத்திய அரசின் அழுத்தத்தால் டிஜிபி வெங்கட்ராமன், தாம்பரம், மதுரை காவல் ஆணையர்கள், 2 மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

இவர்களுடன் மேலும் பல உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.

Source link