வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளான இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜகவின் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தனது மகனுக்கு மாற்றாக திமுக அமைச்சர் காந்தியும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சுமார் 4300-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கரூரில் 93-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு அளித்துள்ளனர்.
