பல நாடுகளில் தமிழர்கள் இருந்தாலும் பலருக்கு தமிழ் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக இந்த அமைப்பு செய்யும் அனைத்து பணிகளுக்கும் விஐடி சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்படும். உலகில் மூத்த மொழி தமிழ். தமிழ் மொழி வளர்ச்சிக்காக விஐடி என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் விஐடி தமிழ் மன்ற நிர்வாகி சிவக்குமார், கர்னாடக இசைப் பாடகர் சிக்கில் குருசரண், தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவன துணைத் தலைவர்கள் மருத்துவர் ரேவதி சுயம்புலிங்கம், பாலா கண்ணன், நாகலிங்கம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ் மற்றும் புலம் பெயர் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் அடையாளமான இலச்சினை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக புலம் பெயர் தமிழர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
