தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை இன்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை பார்ப்பதற்கு தூத்துக்குடியை சார்ந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் , கீதா ஜீவன் ஆகியோர் வருகை தந்தனர். ஆனால் அவர்களை போலீசார் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இன்று காலை விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டும் விதத்திலும் பேசியதாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வ்றிகிறார். இதனிடையில் திமுக முன்னாள் அமைச்சரகள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், கருணாநிதி ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வருகை தந்தனர்.
மார்க்கண்டேயனை பார்ப்பதற்கு அவர் முயற்சி செய்த நிலையில், அவர்களை சந்திக்க விடாமல் காவல்துறை தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் திமுகவினர் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. தொடர்ந்து கீதா ஜீவன் எங்கள் நான்கு பேரை கூட மார்க்கண்டேயனை சந்திக்க விடவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர்.
இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை இப்போது இடுப்பை பிடித்து இழுத்த போலீஸ் தான் தவெகவில் இணைய சொல்லி என்னை மிரட்டினார். அவர் ரூரல் எஸ்.பி. சுதீர் என்பவர். அவருடன் சபரி போட்டு வந்த ஒருத்தரும் என்னை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையுங்கள் என்று சொல்லி மிரட்டினார். எந்த காரணம் கொண்டும் திமுகவினரை அடக்க முடியாது. தொட்டு பார்க்க மாட்டேன் என கூறிவிட்டேன்.
இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. முன்னதாக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஒருமையிலும் பேசியதாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவருக்கு இந்த அவதூறு வழக்கில் இருந்து ஜாமீனும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தன்னை தவெகவில் இணைய சொல்லி மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்தனர். திமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணையுங்கள் சார் என போலீசாரே தன்னிடம் பேசியதாக அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை கிளப்பியது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய சொல்லி மிரட்டியதாக தெரிவித்தது பெரும் விவாதங்களை கிளப்பியது. இதனையடுத்து தற்போது ரூரல் எஸ்.பி. சுதீர்தான் தன்னை ராஜினாமா செய்ய சொன்னதாக அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தெரிவித்துள்ளது கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
