ஆனால் முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் தவெக தலைவர் விஜயும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடுமையாக விமர்சித்து வந்தாலும், அதைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் கிஞ்சித்தும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த 2 கட்சிகளும் போட்டியிலே இல்லை என்பது போல அவற்றை கண்டுகொள்ளாமல் சாதுர்யமாக நகர்ந்து செல்வதாக தெரிகிறது.
தேர்தல் நேரத்தில் அவர்களை பற்றி பேசி அவர்களை பெரிய ஆளாக்கிவிட வேண்டாம் என ஸ்டாலின் எண்ணுவதால் அவர்களை பற்றி பேசுவதை முதல்வர் தவிர்க்கிறார் என திமுகவினர் கூறுகின்றனர்.
அதேவேளையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், நாளை திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் 3 கூட்டங்களில் எதுவும் பேசாவிட்டாலும், விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்குத் தொகுதியில் அவரை எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து இன்று காலை வாக்கிங் சென்று வாக்கு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
