ஜெருசலேம்: இஸ்ரேலில் ஈரான் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கை இருக்கும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இஸ்ரேல் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.
அச்சுறுத்தலைத் தடுக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தல் படி செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எச்சரிக்கையைப் பெற்றவுடன் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைந்து புதிய அறிவிப்பு வரும் வரை அங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு இஸ்ரேல் அரசு எச்சரித்துள்ளது.
