திமுக கூட்டணிக்கு குட்பை சொல்லத் தயாராகிறாரா வேல்முருகன்?

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் வேல்முருகனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், “கூடுதல் தொகுதிகளையும், எங்கள் கோரிக்கைகளையும் ஏற்காத பட்சத்தில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்துள்ளோம். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே நாங்கள் கூட்டணிக்குள் தொடரக் கூடாது என குழப்பத்தை உண்டாக்கி வருகிறார்.

இந்த மாவட்டத்தில் அவர் மட்டுமே செல்வாக்குடன் இருக்க வேண்டும் என நினைப்பதே இதற்குக் காரணம். ஒருவேளை, திமுக கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறினால், அந்த அமைச்சர் போட்டியிடும் தொகுதியில் அண்ணன் வேல்முருகனோ அல்லது அவரது தம்பியோ நிச்சயம் போட்டியிடுவார்கள்” என்றனர்.

Source link