“திமுக கூறியதே… ஜெயலலிதா மரணத்தில் மர்மத்தை கண்டுபிடித்து விட்டார்களா?”

ரேஷன் அரிசி தரமற்றதாக இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சமைக்கக்கூடியதாக தரமான அரிசி விலையில்லாமல் வழங்கப்படும். அது மட்டுமல்லாது, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவையும் விலையில்லாமல் வழங்கப்படும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தான் ஆடியோ வெளியிட்டிருந்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. என்மீது வழக்கு போடுவார்கள். வழக்கு போடட்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அந்த உண்மையை கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கூறியது. கண்டுபிடித்துவிட்டார்களா?

இப்போது நான் சொல்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்ட ரீதியாக விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். பணப்பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை பிரிமீயம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குடிமராமத்துத் திட்டம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திமுகவால் நிறுத்தி வைத்த திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார்.

Source link