அப்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.கே.உமாதேவன் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பேசியதால் மோதல் ஏற்பட்டது. இதில் மூவர் காயமடைந்தனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளங்கோ அளித்த புகாரின்பேரில், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், துணை மேயர் குணசேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் மற்றும் திமுக மாநகராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 16 பேர் மீது காரைக்குடி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
அதேபோல் திமுக துணை மேயர் குணசேகரன் அளித்த புகாரின்பேரில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.கே.உமா தேவன், நகரச் செயலாளர் மெய்யப்பன் மற்றும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட 121 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
