திமுக விருப்ப மனு: வாயைத் திறக்காத தலைமை – கிலியில் உடன்பிறப்புக்கள் | DMK members are afraid of who will get a chance in the upcoming assembly elections.

முடிந்த விருப்ப மனு விநியோகம்!

கடந்த பிப்ரவரி 20-ம் தேதி திமுகவில் தொடங்கிய விருப்ப மனு விநியோகம் மார்ச் 2-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிப்பு வெளியானது. கூடுதலான விருப்ப மனு வந்த காரணத்தினால் கடைசித் தேதி மார்ச் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

கடந்த 15 தினங்கள் மொத்தம் 15,372 திமுக உறுப்பினர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். இதில் தங்களுக்கான விருப்ப மனுக்களைத் தாண்டி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி 1,473 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.

திமுக - விருப்ப மனு

திமுக – விருப்ப மனு

முதல்வரைப் போலவே, துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். அடுத்தபடியாக கனிமொழிக்கும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் பலநூறு பேர் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள்.

முக்கிய தலைவர்களைத் தாண்டி, அந்தந்தப் பகுதி மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில், வட்ட, பகுதி செயலாளர்கள் மட்டுமே 500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் சொல்கின்றன.

Source link