திரிணமூல் vs பாஜக: மேற்கு வங்க தேர்தல் களம் 2026 எப்படி?

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்கின்றனர் அம்மாநில அரசியல் பார்வையாளர்கள்.

மம்தாவின் அரசியலிலும், பாஜகவின் வலுவான எதிர்ப்பிலும் எப்போதே காங்கிரஸ் மாநிலத்தில் ஓரங்கட்டப்பட்டுவிட்டது என்று கூறும் அவர்கள், கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலேயே காங்கிரஸ் 42 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றதை, மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் பரிதாப நிலவரத்துக்கு சாட்சியாக சுட்டிக் காட்டுகின்றனர். இப்போதைக்கு அங்கு இடதுசாரிகளின் நிலையும் இதேதான்.

இந்த அடிப்படையில் பார்க்கையில், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான தேர்தலில் மிகத் தெளிவான இருமுனைப் போட்டியே நிலவுகிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

4-வது முறையாக ஆட்சியைப் பிடிப்பாரா மம்தா?

2011-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி, புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் (CPI-M) ஆட்சியை வீழ்த்தியது. மேற்கு வங்க அரசியலின் திருப்புமுனை இது என்றாலும் மிகையல்ல. நந்திகிராம், சிங்கூர் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டங்கள் கொடுத்த மைலேஜ் 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் வேகத் தடை காணாமல் வேரூன்ற வழிவகுத்துவிட்டது.

Source link