அதன் பின்னர், பிரச்சாரம் செய்யும் இடத்தை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு அரசியல் கட்சித் தலைவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது வாடிக்கையான ஒன்று.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அப்படி போட்டியிட ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை உள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய 51 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். உரிய பாதுகாப்பு அளிப்பதாக காவல் துறையினரும் தெரிவித்தனர் என்றார்.
