திருச்சி: திருச்சியில், வரும் 11ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக்கூட்டம்

திருச்சி: திருச்சியில், வரும் 11ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று மத்திய இணையமைச்சர் முருகன் பார்வையிட்டார்.

பின், அவர் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயகக் கூட்டணி, 30 கட்சிகளுடன் பலமாக உள்ளது; தி.மு.க., கூட்டணி வலுவிழந்துள்ளது. இதனால், முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தின் உச்சத்தில் இருக்கிறார்; தோல்வி பயத்தில் கண்டதையும் பேசி வருகிறார்.

மக்களுக்கு இலவசங்கள் தரக்கூடாது என்று கூறிய த.வெ.க., தலைவர் விஜய், இப்போது இலவசங்களை அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும், மக்களிடம் எந்த அளவுக்கு ஓட்டுகள் வாங்குவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. நடிகரை பார்க்க வரும் கூட்டம், ஓட்டுகளாகும் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர்., காலத்தோடு முடிந்து விட்டது.

கவர்னர் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறை. அதன்படியே, கவர்னர் ரவி மாற்றப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், சமையல் காஸ் விலை உயர்ந்துள்ளது.

எனினும், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், காஸ் விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link