திருநர் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

மத்திய அரசு அறிமுகம் செய்த திருநர் சட்ட மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களாவையில் வழக்கம்போலவே எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்போது எதிர்ப்புக் குரல் மாற்றுப் பாலினத்தவர் சமூகத்திலிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும், அரசியல் கட்சித் தலைவர்களிடமும் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

“யாருடைய உரிமைகளை, வாழ்வைப் பாதிக்கிறதோ, அவர்களது கருத்துகளையே கேட்காமல் திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தங்களைத் திணிக்கக் கூடாது. திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என இயற்றப்பட்டுள்ள சட்டத்தை திருநர் சமுதாயத்தினரே எதிர்க்கிறார்கள் என்றால், அது ஏன் என்று ஆராய வேண்டுமே ஒழிய, அதனைத் திணிக்கக் கூடாது.

ஒன்றிய பாஜக அரசு இம்முயற்சியை நிறுத்தி, திருநர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் திருநர்களின் உண்மையான இசைவைப் பெற முயல வேண்டும்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதுபோல் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் அரசியல் தலைவர்களும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கண்டனக் குரல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

Source link