சென்னை: மா.கம்யூ., மாநிலக் குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட மா.கம்யூ., இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், கூட்டணியில் அக்கட்சிக்கு ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.
ஆனால், கடந்த முறை போலவே ஆறு தொகுதிகள் தந்தால் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறி விட்டது. இந்நிலையில், அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டம், வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கிறது.
அதில், ஐந்து தொகுதிகளை ஏற்று தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு செல்லலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
