திருநெல்வேலி: தீயணைப்பு துறை துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கவைக்க லட்சக்கணக்கில் பணம் வைத்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள போலி சான்றிதழ் விவகாரத்தை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி தீயணைப்பு துறை துணை இயக்குநர் சரவணபாபு. 2025 நவ., 17ம் தேதி இரவு, அவரது அலுவலகத்தில் 2 லட்சத்து 50,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் வைத்த வழக்கில், சரவணபாபு, துாத்துக்குடி சிப்காட் தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.ஆனால், இந்த சம்பவத்தின் பின்னணியில் தீயணைப்பு துறை அதிகாரிகளே திட்டமிட்டு நாடகம் நடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணபாபு அளித்த புகாரின்படி, பெருமாள்புரம் போலீசார் ஐந்து பேர் கைது செய்தனர். இதில் தொடர்புடைய, திருப்பூர் தீயணைப்பு அதிகாரி வீரராஜ் இந்த வழக்கில் கைதாகாமல் ஜாமின் கிடைக்காமல் தலைமறைவாக உள்ளார்.
இதையடுத்து, வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரி, செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். விசாரணையின் போது, தீயணைப்பு துறை துணை இயக்குநர் சரவணபாபு கன்னியாகுமரியில் பணியாற்றிய காலத்தில், சென்னை ராஜ்பவன் தீயணைப்பு வீரர் சுந்தரராஜன் போலி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தார்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து அவரை இந்த வழக்கில் சிக்கவைக்க முயற்சி செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து, 2019 – 2020 காலகட்டத்தில் கன்னியாகுமரியில் வழங்கப்பட்ட இரண்டு போலி சான்றிதழ்கள் உட்பட, தமிழகம் முழுவதும் தீயணைப்பு துறை உயரதிகாரிகள் வழங்கிய போலி சான்றிதழ்கள் குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 26க்கு
