சென்னை அடையாறு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெலங்கானா, ராயலசீமா, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்தக் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக, தென் தமிழகம், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் (ஏப்.7,8) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்-9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
