இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். இதை வழக்கறிஞர்கள் குழு கண்காணிக்க வேண்டும், இந்தப் பணிக்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்தும் இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.
சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக 39 வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிபதிகளுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் நன்றிக் கடன்பட்டுள்ளது.
சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் கேரளாவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். கேரளாவில் முளைக்கும்போதே வேறுடன் பிடுங்கிவிடுவார்கள். தமிழகத்தில் 60-களில் விறகுக்காக பயன்படும் என்று கூறி சீமை கருவேல விதைகளை விதைத்தார்கள். இப்போது விறகுக்கு பயன்படுத்துப்படுது இல்லை.
