தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

எனவே அனைத்து கட்சிகளும் தங்களது பலத்தை மக்கள் மன்றத்தில் தனித்தனியாக நிரூபிக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பாக எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கக் கூடாது என தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பெரிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதால், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் மற்ற கட்சியினருடன் ஈடுகொடுத்து பிரச்சாரம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகே அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டுமென விதிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது என்றும், தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைக்க அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மனு கூட அளிக்க முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Source link