சென்னை: சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் 12, 13ல் தமிழகம் வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, பிப். இறுதியில், தலைமை தேர்தல் கமிஷன் முறைப்படி அறிவிக்க உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைககளின் துவக்கமாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், வரும் 17ல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி அடங்கிய குழுவினர், வரும் 12 மற்றும் 13ம் தேதி, தமிழகம் வர உள்ளனர்.
சென்னையில் இரண்டு நாட்கள் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசிக்க உள்ளனர்.
