தேர்தல் செலவுக்கு நிதி சேர்க்க அவசர அனுமதி: திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: தேர்தல் செலவிற்கு நிதி சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல தனியார் கால்நடை மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவதா? என திமுகவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இபிஎஸ் கூறியதாவது: சேலம் மாவட்டம், தலைவாசலில், அ.தி.மு.க., ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, தி.மு.க., அரசு முற்றுப்புள்ளி வைத்தது.

கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், ஒரு கால்நடை கிளை நிலையம் கூட திறக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் செலவிற்கு நிதி சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல தனியார் கால்நடை மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து, கால்நடை மருத்துவர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளனர். ஆட்சி முடிவடையும் தருவாயில் சட்டத்தை வளைத்து, சுயலாபத்திற்காக தனியார் கால்நடை மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிப்பது கண்டனத்திற்குரியது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Source link