சென்னை: தேர்தல் பறக்கும் படை சோதனையில், 273 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம், இலவச பரிசு பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை நிலவரப்படி, 44.8 கோடி ரூபாய் ரொக்கம், 93 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், 7.60 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள், 116 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த, 104 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச பொருட்கள் போன்றவை, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு, 273 கோடி ரூபாய் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
