நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா (86) நேற்று (மார்ச் 29) காலை பெங்களூருவில் காலமானார்.
நீண்ட காலமாக வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்த சுவர்ணலதா, பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் சூழ அமைதியான முறையில் உயிர் நீத்தார்.
அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெங்களூருவில் உள்ள பிரகாஷ் ராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
