நந்தம்பாக்கத்தில் இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோ வாக எடுத்து மிரட்டி, பணம் பறித்த இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த பெண் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த சென்னை, கொடுங்கையூர், காந்தி தெருவை சேர்ந்த விஷ்வா (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்த அந்த பெண்ணிடம் தான் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்தார். அதனை பெண்ணுக்கு தெரியாமல் விஷ்வா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்தார்.
